கனகர் கிராம மக்களின் காணி பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதியுடன் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டார் கோடீஸ்வரன் எம்.பி - News View

About Us

Add+Banner

Thursday, October 4, 2018

demo-image

கனகர் கிராம மக்களின் காணி பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதியுடன் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டார் கோடீஸ்வரன் எம்.பி

43047657_10156465545516327_4279493529559891968_n+%25281%2529
வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி தலைமையிலான இரண்டாவது செயலணிக் கூட்டம் நேற்று (03.10.2018) பராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது. இக் கூட்டத்தில் வடக்கு கிழக்கு தொடர்பாக பல்வேறு பிரச்சினைகள் பேசப்பட்டது.

இக் கூட்டத்தில் கலந்துகொண்ட அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் அம்பாறை பொத்துவில் கனகர் கிராம 60ம் கட்டை காணி பிரச்சினை தொடர்பாக இரண்டாவது தடவையாக நேற்று ஜனாதிபதியுடன் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டார்.

இக் கூட்டத்தில் கருத்து தெரிவித்த அவர் கனகர் கிராம மக்களின் ஜனநாயக போராட்டம் வெயிலும் மழையிலும் குழந்தைகள், முதியவர்கள், கற்பிணி பெண்கள் என பலரும் போராடிவருகின்ற நிலையில் இது தொடர்பில் நான் உங்களிடம் ஏற்கனவே விளக்கியிருந்தேன். இருப்பினும் அதற்கு தீர்வு கிடைக்காத நிலையில் இன்று இரண்டாவது தடவையாக உங்களிடம் இது பற்றி பேசுகின்றேன்.

அவர்களிடம் நீங்கள் ஆவணங்களை கேட்கின்றீர்கள் இந்த மக்கள் யுத்ததினாலும், சுனாமியாலும் இடம்பெயர்ந்து ஆவணங்களை இழந்து நிற்கின்றனர். அவர்களிடம் நீங்கள் ஆவணங்களை கேட்டு அப்புறபடுத்த நினைக்கின்றீர்கள் ஒரு சிலரிடம் மாத்திரம் ஆவணங்கள் உள்ளது ஜனாதிபதி கனகர் கிராம பிரச்சினை தொடர்பாக தீர்வை வழங்குமாறு உரிய அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பிய பின்பும் உரிய அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்கவில்லை ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.

அப்போது அம்பாறை மாவட்ட அரச அதிபர் ஆவணங்கள் அனைவரிடமும் இல்லை! ஆவணங்கள் இருப்பவர்களை குடியேற்றுவதாக குறுக்கிட்டு பேசிய போது அப்போது அவரை இடைமறித்து பேசிய பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் அவ்வாறு இல்லை நீங்கள் ஆவணம் இல்லாதவர்களிம் ஆவணம் கேட்க முடியாது அவர்களிடம் ஆவணம் இருந்தது இயற்கை அனர்த்தம் மற்றும் யுத்தத்தினால் ஆவணங்களை இழந்தார்கள் தற்போது அவர்கள் இயற்கை அனர்த்தம் மற்றும் யுத்தத்தினால் உயிரை, உடமைகளை இழந்து தங்களது பூர்வீக நிலங்களையும் இழந்து தவிர்க்கின்றனர்.

இவர்களுக்கான ஒரு நிரந்த தீர்வை நீங்கள் அடுத்த கூட்ட தொடருக்கு முன்னர் பெற்றுதர வேண்டும். இல்லாவிடின் இதற்குரிய நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம் என ஜனாதிபதியிடம் காரசாரமாக கூறினார்.

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினரின் நியாயமான கருத்தாகும் எதிர்வரும் 08ம் திகதிக்கு முன்னர் அத்தாட்சி மற்றும் ஆவணங்கள் இல்லாதவர்களுக்கு ஆவணங்களை வழங்கி மக்களுக்கான ஒரு நிரந்தரமான தீர்வை வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டார்.

தனுஜன் ஜெயராஜ் 

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *