நாட்டின் எந்தப் பகுதியில் பிறந்தவர்களுக்கு பிறப்புச் சான்றிதழை பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் தலைமையகத்தில் பெற்றுக்கொள்வதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சேவை ஆரம்பிக்கப்பட்டு கடந்த 12 நாட்களுக்குள் மாத்திரம் 4 ஆயிரத்து 200ற்கும் அதிகமான பிறப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது
யாழ்ப்பாணம் மட்டக்களப்பு திருகோணமலை வவுனியா, ஹம்பாந்தோட்டை போன்ற மாவட்டங்களில் இருந்தும் இதற்காக விண்ணப்பிக்கப்பட்டிருந்ததாக பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் தலைமையகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment