ஹற்றன் - பொகந்தலாவ பிரதான வீதி நடந்து செல்வதற்கு மாத்திரம் திறந்து வைப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 31, 2018

ஹற்றன் - பொகந்தலாவ பிரதான வீதி நடந்து செல்வதற்கு மாத்திரம் திறந்து வைப்பு

மண்சரிவின் காரணமாக தடைப்பட்டிருந்த ஹற்றன் பொகவந்தலாவ பிரதான வீதி நடந்து செல்வதற்காக மாத்திரம் நேற்று (30) திறந்து வைக்கப்பட்டது.

மண்சரிவு கடந்த 13ஆம் திகதி ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது. கடும் மழையின் காரணமாக வீதி மறுசீரமைப்பு தடைப்பட்டது.

ஹாசல்றீ பிரதேசத்தின் பிரவேசத்துக்கான வீதியில் பயணிப்பதனால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. மண்சரிவின் காரணமாக பல கிராம மக்கள் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் தோட்ட வீதியை பயன்படுத்தி வருகின்றனர்.

தேசிய கட்டட ஆய்வு நிறுவனத்தின் சிபார்சுக்கு அமைவாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் இந்த வீதி புனரமைக்கப்படுகின்றது. மேலும் சில தினங்களில் இந்த வீதியின் புனரமைப்பு பணிகள் பூர்த்தி செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment