அவுஸ்ரேலியா சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு - ஒரு வருட கால வெற்றியின் பெறுபேறு - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 31, 2018

அவுஸ்ரேலியா சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு - ஒரு வருட கால வெற்றியின் பெறுபேறு

ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம் அவுஸ்ரேலியாவின் மெல்பன் நகரிலிருந்து நேரடி பயணத்தை ஆரம்பித்து ஒரு வருட காலம் வெற்றிகரமான பெறுபேறுகளை கண்டுள்ளது.

தேசிய விமான சேவை என்ற ரீதியில் மேற்கொள்ளப்பட்ட வர்த்தக தீர்மானத்தின் மூலம் இலங்கை சுற்றுலா துறைக்கு நேரடி பெறுபேறு இடம்பெற்று இருப்பதாக ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

2017ம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் மெல்பன் நகரத்துக்கு நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவுஸ்ரேலியாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

2018 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையில் 45.16 வீத சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதேபோன்று சுற்றுலாத்துறையை அனைத்து துறைகளிலும் 2.8 வீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இலங்கை 6வது பாரிய சுற்றுலா துறை சந்தையாக அவுஸ்ரேலியா அடையாளப்படுத்தபட்டுள்ளது.

இந்தியா, சீனா, ஐக்கிய ராஜ்ஜியம், ஜெர்மன், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பார்க்க இலங்கை சுற்றுலா பயணிகள் துறையில் முன்னேற்றம் கண்டுள்ளது.

No comments:

Post a Comment