கல்லளை மாணவர்களின் முயற்சியில் உதயமான "அல்-அஸ்ஹர் சஞ்சிகை வெளியீட்டு - News View

About Us

About Us

Breaking

Friday, October 5, 2018

கல்லளை மாணவர்களின் முயற்சியில் உதயமான "அல்-அஸ்ஹர் சஞ்சிகை வெளியீட்டு

பொலன்னறுவை அல்-அஸ்ஹர் மகா வித்தியாலயம் - கல்லளை மாணவர்களின் முயற்சியில் உதயமான "அல்-அஸ்ஹர் சஞ்சிகை வெளியீட்டு விழா நேற்று (04.10.2018) காலை 10.30 மணியளவில் பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்வுக்கு பாடசாலை அதிபர் ஜனாப் HM. கலீல் தலைமை தாங்கியதுடன், பிரதம அதிதியாக அஸ்மத் பௌன்டேசன் தலைவரும், சமூக சேவையாளருமான அல்-ஹாஜ் BM. றபீக் அவர்களும், சஞ்சிகை ஆய்வாளராக மீள்பார்வை பத்திரிகையின் பிரதம ஆசிரியர் அஷ்-ஷெய்க் ரவூப் செய்ன் (நளீமி) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
சஞ்சிகையின் முதற்பிரதியை பாடசாலை அதிபர் HM. கலீல், சஞ்சிகை பொறுப்பாசிரியர் ULM. முதஹ்ஹிர், சஞ்சிகை பிரதம ஆசிரியர் AAA.றஹுமான் ஆகியோர் பிரதம அதிதிக்கு வழங்கி வைத்தனர்.

சஞ்சிகையின் சிறந்த ஆக்கமாக சஞ்சிகை பொறுப்பாசிரியர் குழுவால் தெரிவு செய்யப்பட்ட மாணவன் றஹ்மான் அப்துல் அஸீஸ் எழுதிய "இஸ்லாத்தின் வளர்ச்சியில் வாலிபர்களின் பங்களிப்பு" என்ற கட்டுரைக்கு பெறுமதியான பரிசும் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment