கடந்த ஓகஸ்ட் (05) மாதம் இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (05) வௌியிடப்பட்டுள்ளன.
குறித்த பரீட்சை பெறுபேறுகள் இன்று காலை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களான www.doenets.lk, exams.gov.lk, www.results.exams.gov.lk ஆகிய தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
இதேவேளை கையடக்கத் தொலைபேசியின் மூலம் பரீட்சைப் பெறுபேறுகளை SMS வழியாக அறிந்துகொள்ள
EXAM இடைவெளி GV இடைவெளி சுட்டெண்
என டைப் செய்து 1919 க்கு அனுப்புவதன் மூலம் தகவல் திணைக்களத்தின் மூலம் பெறுபேறை அறிந்துகொள்ள முடியும்.
நாடு முழுவதிலுமுள்ள 3,050 பரீட்சை நிலையங்களில், 497 தொடர்பாடல் மத்திய நிலையங்கள் மூலம் இடம்பெற்ற இப்பரீட்சையை எழுத 355,326 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தமைகுறிப்பிடத்தக்கது.
அதற்கமைய, சிங்கள மொழி மூலம் 267,770 பேரும் தமிழ் மொழி மூலம் 87,556 பேர் உள்ளிட்ட 355,326 மாணவர்கள் பரீட்சைக்கு விண்ணப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment