02 இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களத்தின் முன்னாள் இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் மஹகமகே காமினி மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மனு இன்று (02) விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது, சந்தேகநபரை எதிர்வரும் 09 ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதால் சந்தேகநபரின் விளக்கமறியலை நீடிக்க இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றில் கோரிக்கை முன்வைத்தது.
சந்தேகநபரான மஹகமகே காமினியின் மகளுடைய சுகயீன நிலையை கருத்திற்கொண்டு அவருக்கு பிணை வழங்குமாறு சந்தேகநபர் சார்பான சட்டத்தரணி நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார்.
எவ்வாறாயினும் சந்தேகநபருக்கு பிணை வழங்குவதாக இல்லையா என்பது தொடர்பான உத்தரவு அன்றைய தினம் வழங்கப்படும் என்று நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 10 வருடங்கள் பழமையான இரு வாகனங்களை சட்ட ரீதியான முறையில் விடுவிப்பதற்கு பரிந்துரை செய்வதற்காக, நபர் ஒருவரிடம் இருந்து 2 இலட்சம் ரூபா பணம் இலஞ்சமாக பெற்றுக்கொண்ட குற்றத்திற்காகவே அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment