சிங்கப்பூர் மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கிடையில் கைச்சாத்திடப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தம், அரசியலமைப்பை மீறுவதாக உள்ளது என்று தீர்ப்பளிக்க கோரி உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள மனு ஜனவரி 09ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உட்பட எட்டு தரப்பினர் இணைந்து தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு இன்று (04) சிசிர டி ஆப்ரூ, நலின் பெரேரா மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகியோர் உள்ளடக்கிய நீதியரசர்கள் முன் விசாரணைக்கு அழைக்கப்பட்டது.
இதன்போது பிரதிவாதி சார்பாக நீதிமன்றில் ஆஜராகும் மேலதிக சொலிசிஸ்டர் ஜெனரல் சஞ்சய ராஜரத்தினம் வெளிநாடு சென்றிருப்பதால் வேறு ஒரு தினத்தில் விசாரிக்குமாறு அவரது கணிஷ்ட சட்டத்தரணி நீதிமன்றில் கோரினார். அதன்படி அந்த மனுவின் விசாரணை ஜனவரி 09ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment