நாட்டின் சமூக அபிவிருத்தியில் நேரடி தாக்கங்களை செலுத்தும் துறைகளில் துரித அபிவிருத்தியை ஏற்படுத்தும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி நிதியத்துடனான புதிய உடன்படிக்கையில் கைச்சாத்திடுதல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அமெரிக்க விஜயத்தின் போது நேற்று (26) பிற்பகல் நியூயோர்க் நகரில் இடம்பெற்றது.
இதற்கமைய, சமூக முன்னேற்றத்திற்கான நிதியம் மற்றும் சமூக தொழில் முயற்சியாண்மைக்கான நிதியம் ஆகியவற்றை தாபித்தலுடன் தொடர்பான புதிய உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.
ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி நிதியத்தின் இலங்கைக்கான செயற்திட்டங்களில் தனியார் துறையினரின் பங்களிப்பினை பெற்றுக்கொள்ள இதனூடாக எதிர்பார்க்கப்படுகின்றது.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பனவின் பங்குபற்றலில் இவ் உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன. ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர பிரதிநிதி கலாநிதி ரொஹான் பெரேரா மற்றும் பிரதி நிரந்தர பிரதிநிதி சத்யா ரொட்ரிகோ ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment