ராகம ரயில் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற ரயில் விபத்தில், இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று (27) காலை 7.55 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, ராகம பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டியில் இருந்து மாத்தறை நோக்கிச் சென்ற ரயிலுடன் மோதியதினாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
ரயில் பாதையின் குறுக்காகக் கடந்து சென்ற போதே, குறித்த நால்வரும் ரயிலுடன் மோதியுள்ளதாகவும், இது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஐ. ஏ. காதிர் கான்
No comments:
Post a Comment