சட்டவிரோதமான முறையில் ஒரு தொகை வௌிநாட்டு பணத்தை இலங்கையில் இருந்து எடுத்துச் செல்ல முற்பட்ட இலங்கையர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிங்கப்பூர் நோக்கி செல்ல முற்பட்ட இரண்டு பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன கூறினார்.
மினுவங்கொட மற்றும் பமுனுகம பகுதிகளைச் சேர்ந்த 31 மற்றும் 35 வயதான இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
சந்தேகநபர்களின் பயணப் பொதிகளிலும் காற்சட்டைப் பைகளிலும் மிக சூட்சுமமான முறையில் மறைத்துவைத்து பணத்தை கொண்டுசெல்ல முயற்சிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 21,242 அமெரிக்க டொலர் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், அவற்றின் பெறுமதி சுமார் 36 இலட்சத்து 11,000 ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட அமெரிக்க டொலர் அரசுடமையாக்கப்பட்டுள்ளதாக பிரதி சுங்க பணிப்பாளர் விபுல மினுவன்பிட்டிய குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment