நாட்டின் அனைத்துப் பிரஜைகளுக்கும் பிறப்பு, திருமணம் மற்றும் மரண சான்றிதழ்களை இன்று (17) முதல் கொழும்பு பத்தரமுல்லையில் உள்ள பதிவாளர் நாயகம் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மிகக்குறுகிய நேரத்திற்குள் குறித்த சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள முடியும் என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
சான்றிதழ்களை வழங்குவதற்காக பதிவாளர் அலுவலகத்தில் புதிய விநியோக பீடங்கள் இன்று முதல் இயங்கவுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த முறைமையின் கீழ் 1960 முதல் 2012 ஆம் ஆண்டு வரையிலான அனைத்து சான்றிதழ்களையும் ஐந்து நிமிடங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என்று உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
பிரதேச செயலாளர் அலுவலகங்களில் நிலவும் வேலைப்பளுவை குறைக்கும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
தற்சமயம் நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள 332 பிரதேச செயலகங்களில் 183 செயலகங்கள் இந்த சான்றிதழ்களை விநியோகித்து வருகின்றன.
No comments:
Post a Comment