மத்திய மாகாணத்திலுள்ள சகல வைத்தியசாலைகளின் வைத்தியர்களும் எதிர்வரும் 4ஆம் திகதி முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கலஹா பிரதேச வைத்தியசாலையின் சொத்துக்களுக்கு சேதமேற்படுத்திய மற்றும் வைத்தியர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த நபர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கண்டி – கலஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவத்தையடுத்து, வைத்தியசாலையின் சொத்துக்களுக்கு மக்கள் சேதங்களை ஏற்படுத்தியிருந்தனர்.
இது தொடர்பில் சந்தேகநபர்களைக் கைது செய்யாவிடின் பணிப்பகிஷ்கரிப்பு செய்யவேண்டி ஏற்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரித்துள்ளது.
இதனுடன் தொடர்படைய முன்னரான செய்திகளை பார்வையிட
1. https://www.newsview.lk/2018/08/blog-post_556.html
2. https://www.newsview.lk/2018/08/blog-post_792.html
3. https://www.newsview.lk/2018/08/blog-post_144.html
4. https://www.newsview.lk/2018/08/blog-post_111.html
4. https://www.newsview.lk/2018/08/blog-post_111.html
No comments:
Post a Comment