96வது தேசிய மெய்வல்லுனர் போட்டி நேற்று (05) கொழும்பு சுகததாச மைதானத்தில் நிறைவடைந்தது. நான்கு புதிய இலங்கை சாதனைகளும், 11 போட்டிச் சாதனைகளும் அங்கு நிலைநாட்டப்பட்டன.
கயான் ஜயவர்த்தன. ஆர்.ஏ.ஏ.கருணாதிலக, டபிள்யு.வி.எல்.சுகந்தி, நிலானி ரத்னாயக்க ஆகிய வீர வீராங்கனைகள் புதிய இலங்கை சாதனையை நிலைநாட்டியுள்ளனர்.
ஹிமாஸ இஸான், பிரசாத் விமலசிறி. சமித்த ஜயவர்த்தன, டி.எஸ்.ரணசிங்ஹ, நிமாலி லியனாரச்சி, நிலானி ரத்னாயக்க, விதுஷா லக்ஷானி ஆகிய வீர வீராங்கனைகள் புதிய போட்டிச் சாதனையை நிலைநாட்டியுள்ளனர்.
இம்முறை போட்டியில் கூடுதலான சம்பியன் கிண்ணத்தை இலங்கை இராணுவம் வென்றுள்ளது. சிறந்த வீரருக்கான விருதை இராணுவத்தை சேர்ந்த பிரசாத் விமலசிறி தட்டிக் கொண்டார்.
சிறந்த வீராங்கனைக்கான விருதை நிலானி ரத்னாயக்க வென்றுள்ளார். வெற்றிக் கேடயங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு அமைச்சர் பைசர் முஸ்தபா தலைமையில் இடம்பெற்றது.
No comments:
Post a Comment