தலாவ பிரதேச சபைக்கு உட்பட்ட குமாரெலிய கிராமத்தில் 200 மீற்றர் நீளமான வீதி மக்கள் பாவனைக்காக உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து கற்கள் பதித்து புனரமைத்து கொடுக்கப்பட்டது.
குறித்த வீதியானது மக்கள் பயன்பாட்டிற்காக 2018.07.01ஆம் திகதி அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானினால் திறந்து வைக்கப்பட்டது.
இன, மத பேதங்களுக்கப்பால் தனது சொந்த நிதியிலிருந்தும் பல்வேறுபட்ட சமூகப் பணிகளை பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் மேற்கொண்டுவருகின்றார்.
No comments:
Post a Comment