மீண்டும் விடுதலைப் புலிகளை உருவாக்க வேண்டும் என்ற ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர் விஜயகலாவின் துணிச்சலான கூற்று அவரை அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாத துணிச்சலான பெண் என்பதை காட்டியுள்ளது என உலமா கட்சியின் தலைவர் முபாரக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் விஜயகலா நேற்று யாழ்ப்பாணத்தில் நிகழ்வொன்றில் கலந்துகொண்டபோது புலிகளுக்கு ஆதாரவான கருத்து ஒன்றினை கூறியிருந்தார். இது தொடர்பில் இன்று (3) ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே உலமா கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தனது அறிக்கையில் விடுதலைப் புலிகளின் போராட்ட வழி பிழையாக இருந்த போதும் இந்த நாட்டின் சிறு பான்மை மக்கள் சம உரிமை பெற வேண்டும் என்ற இலக்கை யாரும் மறுக்க முடியாது.
அதே போல் விஜயகலா கூறுவது போல் புலிகள் காலத்தில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் கட்டுப்பாட்டில் இருந்தது உண்மைதான். ஆனாலும் முதியோர் பலரின் உயிர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது என்பதையும் யாரும் மறுக்க முடியாது.
அரசாங்கம் விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது. ஆனால் அரசாங்கத்தின் அமைச்சராக இருந்து கொண்டே மீண்டும் விடுதலைப் புலிகள் உருவாக வேண்டும் என சொல்வதற்கு கடுமையான துணிச்சல் வேண்டும்.
பொதுவாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க புலி ஆதரவாளர் என்ற கருத்தும் உண்டு. அதனால் ஏற்பட்ட உந்துதலும் இப்பேச்சுக்கு வழி வகுத்திருக்கலாம். புலிகள் இருந்த போது வடக்கு கிழக்கில் முஸ்லிம்கள் கஷ்டப்பட்ட போதும் தென்னிலங்கை முஸ்லிம்கள் ஞானசார போன்ற இனவாதிகளின் துன்பமின்றி வாழ்ந்தார்கள்.
கிழக்கில் புலிகளால் பல பள்ளிவாயல்கள் சிதைக்கப்பட்ட போதும் தென்னிலங்கையில் எந்தப்பள்ளிவாயலும் சிங்கள இனவாதிகளின் கல்லெறிக்கு முகம் கொடுக்கவில்லை.
எது எப்படியிருந்த போதும் அமைச்சர் விஜயகலாவின் கருத்து நிச்சயம் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் கருத்தாகவே பார்க்கப்பட வேண்டும்.
முபாறக் அப்துல் மஜீத்
உலமா கட்சி
இது தொடர்பான முன்னரான செய்திக்கு
http://www.newsview.lk/2018/07/blog-post_21.html
http://www.newsview.lk/2018/07/blog-post_67.html
http://www.newsview.lk/2018/07/blog-post_58.html
http://www.newsview.lk/2018/07/blog-post_35.html
http://www.newsview.lk/2018/07/blog-post_22.html
http://www.newsview.lk/2018/07/blog-post_22.html
http://www.newsview.lk/2018/07/blog-post_36.html
No comments:
Post a Comment