வடக்கு மற்றும் கிழக்கில் அனைவரும் உயிருடன் வாழ, நிம்மதியாக வீதியில் நடக்க, பிள்ளைகள் நிம்மதியாக கல்வி கற்க மற்றும் பாடசாலைக்கு சுதந்திரமாக சென்று வீடுதிரும்ப வேண்டுமெனின் வடக்கு கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கை ஓங்க வேண்டும் என்று அமைச்சர் விஜயகலா தெரிவித்திருந்த சர்ச்சைக்குரிய கருத்து தற்போது பாராளுமன்றில் பூகம்பமாக வெடித்துள்ளது.
விஜயகலாவின் சர்சைக்குரிய கருத்தால் தற்போது பாராளுமன்றில் சூடான வாத பிரதிவாதங்கள் இடம்பெற்று வருவதால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விஜயகலா அரசாங்கத்தில் இருந்து விலக வேண்டும் என ஆளும் மற்றும் எதிர் தரப்பு எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்தமையாலேயே பாராளுமன்றில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான முன்னரான செய்திக்கு
http://www.newsview.lk/2018/07/blog-post_67.html
http://www.newsview.lk/2018/07/blog-post_58.html
http://www.newsview.lk/2018/07/blog-post_35.html
http://www.newsview.lk/2018/07/blog-post_36.html
No comments:
Post a Comment