இலங்கை வந்த இரு பிரேசில் நாட்டவரின் வயிற்றிலிருந்து பொதியிடப்பட்ட 153 கொக்கேன் உருண்டைகள் மீட்கப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் (30) மற்றும் நேற்று (01) ஆகிய இரு தினங்களில், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு நேற்று முன்தினம் கைதான 30 வயது நபரின் வயிற்றிலிருந்து மொத்தமாக 88 கொக்கேன் உருண்டைகளும், நேற்று (01) கைதான 24 வயது நபரின் வயிற்றிலிருந்து 65 கொக்கேன் உருண்டைகளும் இவ்வாறு மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் மொத்தமாக 1.4 கிலோ கிராம் (1,400 கிராம்) கொக்கேன் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதோடு, அதன் பெறுமதி ரூபா 35 மில்லியன்கள் (ரூபா 3.5 கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
குறித்த சந்தேகநபர்கள் இருவரும், தற்போது பொலிஸ் பாதுகாப்பின் கீழ் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பொலிஸ் போதை தடுப்பு பிரிவினர், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இது தொடர்பான முன்னரான செய்திகளை பார்வையிட
http://www.newsview.lk/2018/07/blog-post_96.html
http://www.newsview.lk/2018/07/13.html
No comments:
Post a Comment