12,000 அரச நிறுவனங்கள் உரிமை பத்திரம் அற்றவை - காணி அமைச்சர் கயந்த கருணாதிலக்க - News View

About Us

About Us

Breaking

Sunday, July 1, 2018

12,000 அரச நிறுவனங்கள் உரிமை பத்திரம் அற்றவை - காணி அமைச்சர் கயந்த கருணாதிலக்க

எந்தவொரு உரிமை பத்திரமும் அற்ற பல அரச நிறுவனங்கள் இருப்பதாக காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். 

காலி, பத்தேகம பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

உரிமை பத்திரமும் அற்ற 12,000 அரச நிறுவனங்களுக்கு உடனடியாக உரிமை பத்திரத்தை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

12,000 அரச நிறுவனங்கள் உரிமை பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பங்களை கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

ஐக்கிய தேசிய கட்சி தேர்தலை எதிர்பார்த்து வேலை செய்யும் கட்சி இல்லை எனவும் அது எதிர்காலத்தை எண்ணி மக்களுக்கு சரியான தீர்ப்பை வழங்கும் கட்சி என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment