மாத்தறை நகை கடையில் கொள்ளை அடிக்கப்பட்ட தங்க நகைகளின் ஒரு பகுதியை மீட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
நேற்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய புள்ளியாக கருதப்படும் ஹபரகட வசந்த நேற்று அவரது வீட்டிற்கு வந்துள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
இதன் அடிப்படையில் அவருடைய வீட்டை சோதனை செய்ய சென்ற போது, அங்கு துப்பாக்கி ஒன்றும் ரவைகள் நான்கும் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஹபரகட வசந்தவின் வீட்டில் இருந்த மூவரை கைது செய்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவர் ஹபரகட வசந்தவின் மனைவி எனவும், ஏனைய இருவரும் ஹபரகட வசந்தவின் பெற்றோர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஹபரகட வசந்தவின் தாயிடம் நடத்திய விசாரணைகளின் பின் மாத்தறையில் நகை கடையில் கொள்ளை அடிக்கப்பட்ட தங்க நகைகளின் ஒரு பகுதி மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment