அமைச்சர் ரவூப் ஹக்கீமால் புத்தளத்தில் பல்வேறு பிரதேசங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறந்துவைப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, June 3, 2018

அமைச்சர் ரவூப் ஹக்கீமால் புத்தளத்தில் பல்வேறு பிரதேசங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறந்துவைப்பு

புத்தளம் மாவட்டம், கொத்தாந்தீவு, பெருக்குவட்டான், சமீரகம, கணமூலை, மதுரங்குளிய, கல்பிட்டிய, வனாத்துவில்லு மற்றும் விருதோடை ஆகிய பிரதேசங்களுக்கு சுத்தமான குடி நீரைப் பெற்றுக்கொள்வதற்கான குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை (Ro Plant) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் நேற்று (02) பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைத்தார்.
சிறுநீரக நோயினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இப்பிரதேசத்தில் இவ்வாறான திட்டங்களின் மூலம் சிறுநீரக நோய் ஏற்படுவது மட்டுப்படுத்தப்படும்.

புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ், மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ், கட்சியின் உயர்பீட உறுப்பினர் பைரூஸ் ஹாஜியார் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment