நகர சபையின் கட்டளைச் சட்டத்திற்கு முறனாக வகை மாற்றம் செய்வதை நாங்கள் எதிர்க்கின்றோம் : நகர சபை உறுப்பினர் பிர்தௌஸ் நழீமி - News View

About Us

About Us

Breaking

Monday, June 4, 2018

நகர சபையின் கட்டளைச் சட்டத்திற்கு முறனாக வகை மாற்றம் செய்வதை நாங்கள் எதிர்க்கின்றோம் : நகர சபை உறுப்பினர் பிர்தௌஸ் நழீமி

நகர சபையின் கட்டளைச் சட்டத்திற்கு முறனாக வகை மாற்றம் செய்வதை நாங்கள் எதிர்க்கின்றோம் என காத்தான்குடி நசர சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினர் அஷ்ஷெய்ஹ் எம்.பி.எம்.பிர்தௌஸ் நழீமி தெரிவித்தார்.

நேற்று திங்கட்கிழமை (4.6.2018) காத்தான்குடி நகர சபையின் விஷேட அமர்வு காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தலைமையில் நடைபெற்றது

இதன் போது காத்தான்குடி நகர சபை வகை மாற்றம் தொடர்பான பிரேரணை தவிசாளரினால் முன் வைக்கப்பட்டது.

இந்த வகை மாற்றத்தின் கீழ் காத்தான்குடி நகர சபையின் மாடு அறுக்கும் மடுவெத்திற்கான வடிகான் உட்பட அதன் திருத்த வேலைகள், காத்தான்குடி கடற்கரையை துப்பரவு செய்யும் இயந்திரத்தை பழுது பார்த்தல், 300 தெரு மின் விளக்குகளை கொள்வனவு செய்தல், காத்தான்குடி பிரதான வீதியை அழகு படுத்தும் நடவடிக்கைக்காக ஈத்த மரங்களுக்கு மின் விளக்குகளினால் ஒளியூட்டுதல், பிரதான வீதியிலுள்ள பூமரங்களுக்கு ஒளி யூட்டுதல், போன்ற நகரை அழகு படுத்தும் திட்டங்களை மேற் கொள்தல் விடயங்களுக்காக சுமார் 100 இலட்சம் ரூபாவை செலவு செய்வதற்காக இந்த வகை மாற்றம் எனும் பிரரேரணை முன் வைக்கப்பட்டது.
மாடு அறுக்கும் மடுவத்தின் புனரமைப்பு மற்றும் பிரதான வீதியினை அழகு படுத்துவது தொடர்பாக தவிசாளர் அஸ்பர் தனது உரையில் தெரிவித்ததுடன் காத்தான்குடி நகர சபை பிரிவில் 2000 தெரு மின் விளக்குகள் போட வேண்டியுள்ளது. அதில் முதல் கட்டமாக 300 தெரு மின் விளக்குகளை போடுவதற்கு உத்தேசித்து அதற்காக மாதிரி மின் விளக்குகள் பெறப்பட்டுள்ளதாகவும் தவிசாளர் அஸ்பர் குறிப்பிட்டார். இதன் போது அந்த மாதிரி தெரு மின் விளக்கையும் சபை உறுப்பினர்களுக்காக காண்பித்தார்.

இதன் போது கருத்து தெரிவித்த காத்தான்குடி நகர சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் அஷ்ஷெய்க் எம்.பி.எம்.பிர்தௌஸ் நழீமி காத்தான்குடியை அழகு படுத்தும் வேலைத்திட்டத்திற்கு அல்லது மாடு அறுக்கும் மடுவத்தினை புனரமைப்தற்கு நாம் எதிர்ப்பில்லை. ஆனால் நகர சபையின் கட்டளைச் சட்டத்திற்கு முறனாக வகை மாற்றம் செய்வதை நாங்கள் எதிர்க்கின்றோம் என தெரிவித்தார்.

அத்துடன் விலை மனுக்கோராமல் தெரு மின் விளக்குகள் நகர சபையினால் வாங்கப்படுவது தொடர்பிலும் ஏற்கனவே சபைக்கு தெரியாமல் இந்த தெரு மின் விளக்குகள் வாங்கப்பட்டு விட்டதாகவும் இதனால் இந்த விடயங்கள் நகர சபையின் கட்டளைச் சட்டத்தை மீறி செயற்படுவதால் தான் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறினார்.

சரியான ஒழுங்கில் காத்தான்குடி நகர சபையின் கௌரவத்தையும் நகர சபை உறுப்பினர்களின் கௌரவத்தையும் பாதுகாத்து அனைவரும் செயற்பட வேண்டும் எனவும் அஷ்ஷெய்க் எம்.பி.எம்.பிர்தௌஸ் நழீமி குறிப்பிட்டார்.
இதன் போது வகை மாற்றம் தொடர்பில் நகர சபை கட்டளைச் சட்டம் கூறும் சரத்துக்கள் பற்றி நகர சபை செயலாளர் திருமதி றிப்கா ஷபீன் அவர்களினால் வாசிக்கப்பட்டது.

இந்த வகை மாற்றம் நகர சபை தவிசாளருக்குள்ள அதிகாரங்களைப் பயன் படுத்தி இந்த வேலைத்திட்டங்களை மேற் கொள்ள முடியும். எனினும் நகர சபையின் உறுப்பினர்களின் கவனத்திற்காக இதை கொண்டு வந்துள்ளேன் என தெரிவித்த நகர சபை தவிசாளர் நான் பழய தவிசாளர் போன்று செயற்பட விரும்ப வில்லை. நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயற்பட வேண்டும் என்பதையே விரும்புகின்றேன் என தவிசாளர் எஸ்.எச். அஸ்பர் தெரிவித்தார்.

வகை மாற்றம் தொடர்பாக தனக்குள்ள அதிகாரங்களைப் பயன் படுத்தி நான் சில வேலைகளை செய்ய முடியும். அவ்வாறில்லாமல் நான் வெளிப்படைத்தன்மையுடன் இந்த சபைக்கு அனைத்து வேலைத்திட்டங்களையும் தெரியப்படுத்துகின்றேன் எனவும் தவிசாளர் மேலும் தெரிவித்தார்.

இன்றைய காத்தான்குடி நகர சபையின் விஷேட அமர்வில் நகர சபை உறுப்பினர்களான பொறியியலாளார் சிப்லி பாறூக், கே.எல்.எம்.பரீட், அலி சப்ரி, ஜனாபா சல்மா ஹம்சா ஆகியோர் கலந்து கொள்ள வில்லை என்பது குறிப்பிட்டத்தக்கது.

எம்.எஸ்.எம்.நூர்தீன்

No comments:

Post a Comment