அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோர் தாக்கல் செய்த மீள்பரிசீலனை மனு மீது சட்டமா அதிபர் விளக்கம் - News View

About Us

About Us

Breaking

Friday, June 1, 2018

அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோர் தாக்கல் செய்த மீள்பரிசீலனை மனு மீது சட்டமா அதிபர் விளக்கம்

தமக்கு பிணை வழங்குமாறு கோரி பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் தாக்கல் செய்த மீள்பரிசீலனை மனு சம்பந்தமாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில் விளக்கமளித்தார். 

மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதி ப்ரீதி பத்மன் சுரசேன மற்றும் நீதிபதி சிரான் குணரத்ன முன்னிலையில் இன்று (01) விசாரணைக்கு வந்தது. 

கொழும்பு நீதவான் நீதிமன்றம் மற்றும் கொழும்பு மேல் நீதிமன்றம் ஆகியன அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோருக்கு பிணை மறுப்புத் தீர்ப்பு வழங்கியது சட்டரீதியாகவே என்று சட்ட மா அதிபர் சார்பில் ஆஜராகியிருந்த மேலதிக சொலிசிஸ்டர் ஜெனரல் யசந்த கோதாகொட மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்தார். 

அதன்படி இந்த மனு மீதான மேலதிக விசாரணைகள் எதிர்வரும் 11ம் திகதிக்கு பிற்போடப்பட்டது. 

இந்த மனு மூலம் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோர், மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி சம்பந்தமாக கைது செய்யப்பட்டுள்ள தம்மை பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் பிணையில் விடுவிப்பதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் மறுப்புத் தெரிவித்ததாக நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். 

எனினும் விசாரணைகளின் படி இரகசியப் பொலிஸார் நீதிமன்றுக்கு சமர்பித்த அறிக்கையில் பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் எந்த தவறும் இனங்காணப்படவில்லை என்று மனுதாரர்கள் தெரிவித்தனர். 

இதன்காரணமாக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட பிணை மறுப்புத் தீர்ப்பு சட்டத்துக்கு முரணானது என்று தீர்ப்பளித்து தம்மை பிணையில் விடுவிக்க உத்தரவிடுமாறு அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன மேன்முறையீட்டு நீதிமன்றில் கேட்டுள்ளனர்.

No comments:

Post a Comment