காங்கோசன்துறை, மயிலிட்டித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் தீப்பிடித்துள்ளது.
இந்தச் சம்பவம் இன்று (18) அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன் குறித்த கப்பலில் எழுந்த தீயை கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவரும் நடவடிக்கையில் கடற்படையினர் ஈடுபட்டனர்.
திருத்த வேலை காரணமாக பல மாதகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலிலேயே இவ்வாறு தீப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கப்பல் இனந்தெரியாதோரால் தீமூட்ப்பட்டுள்ளதாக கப்பலின் உரிமையாளர் குற்றம்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment