மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூண மகேந்திரனின் கடன் அட்டை நிலுவைத் தொகையை டபிள்யூ. எம். மென்டிஸ் நிறுவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 3.2 மில்லியன் ரூபா கடன் அட்டை நிலுவைத் தொகையை காசோலைகள் மூலம் டபிள்யூ. எம். மென்டிஸ் நிறுவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தகவலை சட்ட மா அதிபர் திணைக்களம், கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று (07) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment