தங்களது வரட்டு கௌரவத்திற்காகவும் தன்னிடம் பணம் இருக்கும் பெருமையாலும் பள்ளிவாசல் நிர்வாகத்தை விட்டு வெளியேறாமல் தனக்கு உரித்தான சொத்து போல் பள்ளிவாசலை கட்டி பிடித்துக்கொண்டு அடுத்த படித்த தலைமுறைக்கு வழிவிடாமல் இருப்பதன் காரணத்தால் நமது சமூகம் மென்மேலும் பிளவுகளையும் பிரச்சினைகளையும் சந்திப்பார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
பட்டம், பதவி பொருப்புகள் ஒரு மனிதனை தேடி வர வேண்டுமே தவிர அதை நாம் தேடி போகக்கூடாது இருந்தாலும் நமது பல பிரதேசங்களிலுள்ள பள்ளிவாசல்களின் பள்ளி தலைமையும் நிர்வாகமும் அவர்களது பரம்பரை சொத்துபோல் நாங்கள்தான் ஆயுட் கால தலைவர்கள் நிர்வாகம் என்கின்றார்கள்.
பள்ளிவாசல் உங்கள் வீட்டுச் சொத்தா...? இது என்ன மன்னர் ஆட்சியா...? உங்களுக்கு பின் உங்கள் பிள்ளைகள் பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு வர வேண்டுமென்று சொல்வதற்கு...?
3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பள்ளிவாசல் நிர்வாகம் கலைக்கப்பட்டு அப்பள்ளிவாசலுக்குட்பட்ட மகள்ளா வாசிகளின் முன் புதிய தலைமை நிர்வாகம் தெரிவு செய்யப்பட வேண்டும் இதுவே ஜனநாயகம்... இதுவே நாட்டிலுள்ள வக்பு சட்டம்.
பள்ளிவாசல் நிர்வாகம் மக்கள் மத்தியில் நீதியாக தெரிவு செய்யப்பட்டு படித்தவர்களிடமும், ஆளுமையுள்ளவர்களிடமும், மார்க்க சட்டதிட்டங்களை கற்ற நன்றாக அறிந்து செயற்படக்கூடியவர்களிடம் செல்லாதவரை பள்ளிவாசல்களில் அன்னிய மதத்தவர்களின் காலச்சாரம் மட்டுமல்ல சிலைகளும் நட்டப்படலாம்.
No comments:
Post a Comment