இரண்டு நாள் அரச முறைப்பயணமொன்றை மேற்கொண்டு ஈரான் சென்றிருக்கும் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானிக்குமிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (13) இடம்பெற்றது.
தெஹ்ரானிலுள்ள ஜனாதிபதி மாளிகைக்கு (Sadabaad Palace) சென்ற ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை, ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றார்.
ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு அமோக வரவேற்பு வழங்கப்பட்டது.
இருநாடுகளின் தலைவர்களுக்குமிடையிலான சுமுகமான கலந்துரையாடலை தொடர்ந்து இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.
No comments:
Post a Comment