மறைந்த சிரேஷ்ட கலைஞர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் இறுதிக் கிரியைகளின் போது காணாமல் போயிருந்த இந்தியாவில் வழங்கப்பட்ட தங்க மயில் (ரனமயூரா) என்றழைக்கப்படும் கௌரவ பதக்கம் இன்று காலை கொள்ளுபிட்டி – கடுவலை ,177ஆம் வீதி இலக்க அதி சொகுசு பஸ் ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
ரனமயூரா வாழ்நாள் விருது 2000 ஆம் ஆண்டு இயக்குனர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸுக்கு அவர் ஆற்றிய சேவையை பாராட்டும் வகையில் 31ஆவது சர்வதேச இந்திய சினிமா விருது வழங்கும் விழாவின் போது வழங்கப்பட்டது.
குறித்த விருது அன்னாரின் இறுதிக்கிரியைகளின் போது பூதவுடலுக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த போதே திருடப்பட்டுள்ளதாக பொலிஸாரினால் தீவிரமாக தேடப்பட்டு வந்த நிலையிலேயே இன்று மீட்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment