தங்க மாலைகளை கொள்ளையிட்ட சம்பவங்கள் பலவற்றுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூன்று பேர் நீர்கொழும்பு வலய குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்க்கொழும்பு, கடான , கட்டுநாயக்க மற்றும் கொச்சிகடை பிரதேசங்களில் இடம்பெற்ற 12 கொள்ளை சம்பவங்களுடன் சந்தேகநபர்களுக்கு தொடர்பிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி தம்புள்ளை மற்றும் கொச்சிக்கடை பிரதேசங்களில் நீர்கொழும்பு வலய குற்ற விசாரணைப் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.
No comments:
Post a Comment