அரை சொகுசு பஸ் சேவையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியுடன் நிறுத்தவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்தது.
பயணிகளுக்கு ஏற்படும் அசெளகரியங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி. ஹேமச்சந்திர கூறினார்.
அரை சொகுசு பஸ்களில் ஆசனங்களின் எண்ணிக்கையை விட அதிகமான பயணிகள் ஏற்றப்படுகின்றமை தொடர்பில் தொடர்ந்தும் முறைப்பாடுகள் கிடைத்து வருவதாக அவர் தெரிவித்தார்.
இந்த பஸ்களில் சாதாரண பஸ்களை விட பயணச்சீட்டு கட்டணம் அதிகம் அறவிடப்பட்டாலும் பயணிகளுக்கு உரிய வசதி கிடைப்பதில்லை என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சுட்டிக்காட்டியது.
இதனால் அரை சொகுசு பஸ்களுக்கு எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு பின்னர் சொகுசு அல்லது சாதாரண பயணிகள் போக்குவரத்திற்கான அனுமதிப் பத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஆணைக்குழு அறிவித்தது.
No comments:
Post a Comment