கண் பார்வையை இழந்தும் தனது பிள்ளைகளை படிப்பிக்கும் இப்றாகீம் - News View

About Us

About Us

Breaking

Saturday, May 12, 2018

கண் பார்வையை இழந்தும் தனது பிள்ளைகளை படிப்பிக்கும் இப்றாகீம்

இவர் பெயர் எம்.சி.எம்.இப்றாகீம் புதிய காத்தான்குடி மத்திய வீதி 4ம் குறுக்கு தொருவில் வசிக்கின்றார். இவர் தபாகலத்தில் உத்தியோகத்தராக கடமையாற்றி வந்த நிலையில் கடந்த 15 வருடங்களுக்கு முன் கண் பார்வையை இழந்து விட்டார்.

கண் பார்வையை இழந்ததால் இவரது அரச உத்தியோகத்தமும் பறி போய் விட்டது. இவருக்கு அரசாங்கம் வழங்கும் ஓய்வூதியக் கொடுப்பனவும் வழங்கப்பட வில்லை. அந்த ஓய்வூதியக் கொடுப்பனவுக்காக அவர் படாத பாடுபட்டார். ஆனால் அவருக்கு கிடைக்க வில்லை.

இந்த நிலையில் இவருக்கு நான்கு பிள்ளைகள் அதில் மூன்று ஆண் பிள்ளைகளும் ஒரு பெண் பிள்ளையுமாகும். இதில் 3 பிள்ளைகள் கல்வி கற்கின்றனர்.

கண் பார்வை இழந்த நிலையிலும் பல் வேறு சிரமங்களுக்கு மத்தியில் வறுமையிலும் அவரது பிள்ளைகளை படிப்பிக்கின்றார். இவரது குடும்பம் மிகவும் வறிய குடும்பமாகும்.

இவர் எனது ஆரம்பகால நண்பர் நாங்கள் இருவரும் ஒரே வீதியிலேயே வசித்தோம். நானும் அவரும் ஒன்றாக கல்விப் பொதுத்தராதர சாதரண தரப்பரீட்சை எழுதியது இன்றும் ஞாபகம் இருக்கின்றது. அவரை இன்று அவரது வீடு தேடிச் சென்று சந்தித்து சில மணி நேரம் கலந்துரையாடினேன்.

தகவல்
எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி

இவரது நிலையை கருத்திற் கொண்டு முடியுமான சகோதரர்கள் அவருக்கு உதவுங்கள் அல்லாஹ் றஹ்மத் செய்வான்.
அவரது வங்கி கணக்கு 
M.C.M.Ibrahim
065200130019346
Peoples Bank 
kattankudy Branch
அவரது தொலைபேசி இலக்கம் 0772644351

No comments:

Post a Comment