பலஸ்தீன் விற்பனைக்கல்ல – எரகத் - News View

About Us

About Us

Breaking

Sunday, May 13, 2018

பலஸ்தீன் விற்பனைக்கல்ல – எரகத்

பலஸ்தீன் விற்பனைக்கல்ல என பலஸ்தீன் அதிகார சபை நிறைவேற்றுக் குழுவின் செயலாளர் ஷயீட் எரகத் வலியுறுத்தியுள்ளார். பலஸ்தீனர்களின் உரிமைகள் விட்டுக் கொடுக்கப்பட மாட்டாது. அவை சர்வதேச சட்டத்தின் அடிப்படையிலானவை. டெல் அவிவ்வுக்கு வந்த அமெரிக்காவின் ராஜாங்க செயலாளர் மைக் பொம்போ தெரிவித்த கருத்துக்களுக்கு எரகத் பதிலடி வழங்கியுள்ளார்.

அமெரிக்கா பலஸ்தீனர்களை பேச்சுவார்த்தை மேடைக்குக் கொண்டு வர அழுத்தங்களைப் பிரயோகிக்கின்றது என மைக் பொம்போ இஸ்ரேலிய தலைநகர் டெல் அவிவ்வில் தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலளிக்கையிலேயே எரகத் இவ்வாறு குறிப்பிட்டார்.

“டொனால் ட்ரம்ப் ஜெரூசலத்தை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்ததன் மூலம் சமாதானப் பேச்சுவார்த்தைகளிலிருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். ஜெரூசலம் விவகாரத்தை விட்டு விட்டு பலஸ்தீன அகதிகள் பிரச்சினையை கிடப்பில் போட்டுவிட்டு பேச்சுவார்த்தைக்கு எப்படிச் செல்ல முடியும் என்று எரகத் மேலும் தெரிவித்துள்ளார்.

மீள்பார்வை 

No comments:

Post a Comment