சிரேஷ்ட திரைப்படக் கலைஞர் கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் இறுதிக் கிரியைகள் இன்று பிற்பகல் பூரண அரச மரியாதையுடன் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறும்.
அன்னாரின் பூதவுடலுக்கு நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட அரச தலைவர்கள் முக்கியஸ்தர்களுடன் பெருமளவு மக்கள் தமது இறுதி அஞ்சலியை செலுத்தினர்.
நேற்றைய தினம் கொழும்பு லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தையிலுள்ள அன்னாரின் இல்லத்தில் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்ததுடன் இன்று காலை 10.00 மணிக்கு அன்னாரின் பூதவுடல் கொழும்பு பௌத்தாலோக்க மாவத்தையிலுள்ள தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும்
அதனையடுத்து கலைஞர்களின் பங்களிப்போடு பிற்பகல் 3.00 மணிக்கு பூதவுடல் சுதந்திர சதுக்கத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதிக்கிரியைகள் இடம்பெறும் என இறுதி கிரியை ஏற்பாட்டாளர்களுள் ஒருவரான பிரபல கலைஞர் ரவீந்திர ரந்தெனிய தெரிவித்தார்.
கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் உலகில் அதிகூடிய வயதில் வாழ்ந்த திரைப்படக் கலைஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment