ஜனாதிபதியினால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போன்று, ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் 18 பேர் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். இது நல்லாட்சி அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் நான்காவது அமைச்சரவை மாற்றமாகும்.
இது தவிர, ஏற்கனவே உள்ள அமைச்சரவையிலுள்ள அமைச்சர்கள் தொடர்ந்தும் இவ்வமைச்சரவையில் இடம்பெறுவார்கள் என்பதோடு, புதிய இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள், நாளைய தினம் (02) சத்தியப் பிரமாணம் செய்யவுள்ளனர்.
இந்நிகழ்வு நாளை (02) 10.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதோடு, அது தொடர்பில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியைச் சேர்ந்த 16 உறுப்பினர்கள் அமைச்சு பதவிகளிலிருந்து விலகியதை அடுத்து மேற்கொள்ளப்பட்டுள்ள அமைச்சரவை மாற்றம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று (01) சத்தியப் பிரமாணம் செய்த 18 அமைச்சர்களின் விபரம்
1. அமைச்சர் மனோ கணேசன் :
தேசிய நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள்
திட்டமுகாமைத்துவம் இளைஞர்கள் அலுவல்கள் மற்றும் தென்மாகாண அபிவிருத்தி
புனர்வாழ்வு மீள்குடியமர்வு வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து அலுவல்கள் அமைச்சர்
கடற்தொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி
விளையாட்டுதுறை மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர்
நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு
பொதுநிர்வாகம் மற்றும் முகாமைத்துவம் சட்டம் ஒழுங்கு .
நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி
சமூக வலுவூட்டல்
நீர்ப்பாசனம் நீர்வளங்கள் முகாமைத்துவம் மற்றும் அனர்த்த முகாமைத்துவம்
விவசாயத்துறை
உள்நாட்டு அலுவல்கள் மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி
விஞ்ஞானம் தொழில்நுட்பம் ஆய்வு திறன்அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் மலையக பாரம்பரியம்
பொது நிறுவனங்கள் மற்றும் கண்டி அபிருத்தி
உயர்கல்வி மற்றும் கலாச்சார அமைச்சர்
தொழில் மற்றும் தொழிலாளர் உறவுகள்
நிலைபேறான அபிவிருத்தி மற்றும் வனவிலங்கு மற்றும் பிராந்திய அபிவிருத்தி
No comments:
Post a Comment