எதிர்வரும் 20 வருட காலத்தை இலக்காக கொண்டு ரயில்வே துறையை அபிவிருத்தி செய்வதற்கான திட்டத்தை வகுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்காக 60 கோடி 50 இலட்ச அமெரிக்க டொலர்கள் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமது அமைச்சில் சமீபத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
நாளாந்தம் ரயில்கள் மூலம் கொழும்புக்கு வரும் மற்றும் கொழும்பில் இருந்து புறப்பட்டு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 3 இலட்சமாகும். 2025ம் ஆண்டளவில் இந்த எண்ணிக்கை 12 இலட்சமாக அதிகரிக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த மக்களுக்கு வசதிகளை செய்தி கொடுப்பதற்கான புதிய அபிவிருத்தி திட்டம் ஒன்று தேவையாகும். ரயில் பாதை கட்டமைப்பை மேம்படுத்தல். புதிய சமிக்ஞை கட்டமைப்பை அறிமுகப்படுத்தல், புதிய தொடர்பாடல் முறையும் இதன்மூலம் பயன்படுத்தப்படும். திட்டத்தை வகுப்பதற்காக ஆசிய அபிவிருத்தி 15 இலட்சம் அமெரிக்க டொலர்களை நிதியுதவியாக வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
இதற்கு மேலதிகமாக தள ஆய்வு மற்றும் தயாரிப்பு விடயங்களுக்காக 100 கோடி அமெரிக்க டொலர்களை இந்த வங்கி வழங்கவுள்ளது. கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் ரயில் சேவைக்கு தேவையான நிர்மாணப் பணிகள் மற்றும் ரயில் பாதைகளை அமைப்பதற்காகவும் 60 கோடி ரூபா கடனை வங்கி வழங்குகிறது.
No comments:
Post a Comment