வட கொரியாவின் அணுவாயுதப் பரிசோதனை தளம் அடுத்த மாதம் மூடப்படும் என தென் கொரியா தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையானது பொதுமக்கள் மாத்திரமல்லாது தென்கொரியா மற்றும் அமெரிக்க வல்லுனர்களின் முன்னிலையில் நடத்தப்படுமென தென்கொரிய ஜனாதிபதி அலுவலகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தற்போது தென் கொரியாவை விட அரை மணித்தியால வேறுபாட்டை கொண்ட நேர மண்டலத்தை கொண்டிருக்கும் வட கொரியா, அதனை தென்கொரியாவின் நேரத்திற்கு ஏற்ப மாற்றிக்கொள்ளவும் இணங்கியுள்ளதாக தென் கொரிய ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
65 வருடங்களின் பின்னர், கொரிய தீபகற்பகத்தின் தலைவர்களுக்கிடையில் கடந்த வௌ்ளிக்கிழமையன்று சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது, அணுவாயுதமற்ற பிராந்தியமாக கொரிய தீபகற்பத்தை மாற்றுவதற்கு இணைந்து செயலாற்றப்போவதாக வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் மற்றும் தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன் ஆகியோர் உறுதியளித்தனர்.
சில மாதங்களுக்கு முன்னர், கொரிய நாடுகளுக்கிடையில் பதற்றம் நிலவி வந்த சூழ்நிலையில் இந்த உச்சிமாநாடு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
கொரிய தீபகற்பத்தில் உள்ள இரு பிராந்தியங்களிலும் வாழும் மக்கள் இதன் பின்னர் பிரிவினைவாதத்துடன் வாழ முடியாதென வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்குமிடையில் யுத்த நிறுத்தத்தை இலக்காக கொண்டு சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட வேண்டுமென்பதை தாம் எதிர்ப்பார்ப்பதாக வடகொரிய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்குமிடையிலான போரை உத்தியோகப்பூர்வமாக நிறைவு செய்வதற்காக அமெரிக்கா மற்றும் சீனாவுடன் இணைந்து மூன்று அல்லது நான்கு கட்ட பேச்சுவார்த்தை இடம்பெற வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.
இரு பிராந்தியங்களுக்கு இடையிலும் கடந்த 1950 ஆம் ஆண்டு தொடக்கம் 1953 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் யுத்தம் இடம்பெற்றது.
இந்த யுத்தத்தின் பின்னர் இரு பிராந்தியத்தின் தலைவர்களுக்கு இடையிலும் இடம்பெறும் இந்த சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தாகவும் சிறப்பு வாய்ந்ததாகவும் காணப்படுகின்றது.
No comments:
Post a Comment