வடக்கில் மாபியா போன்று நிர்வாக சேவை உயரதிகாரிகள் - சீ.வி. விக்னேஸ்வரன் - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 3, 2018

வடக்கில் மாபியா போன்று நிர்வாக சேவை உயரதிகாரிகள் - சீ.வி. விக்னேஸ்வரன்

நிர்வாக சேவை உயரதிகாரிகள் பலர் வட மாகாணத்தில் மாபியா போன்று செயற்படுவதாகவும் அவர்கள் ஆளுநர் உத்தரவைக்கூட மதிப்பதில்லை என வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் கூறியுள்ளார். அரச நிர்வாக சேவையில் அதி சிறப்பு தரத்திலுள்ள பலர், வடக்கு மாகாண சபையில் இவ்வாறு 20 ஆண்டுகளுக்கு மேலாக கடமையாற்றுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக இருந்த ஆர். ரவீந்திரன், வட மாகாண சபையின் தீர்மானத்துக்கு அமைவாக ஆளுநரால் கொழும்புக்கு இடமாற்றப்பட்டு ஒருவாரம் கடந்துள்ளது. இந்த நிலையில், தொடர்ந்து மாகாண கல்வி அமைச்சில் இருந்து விலகிச் செல்லவில்லை என்றும் முதலமைச்சர் அலுலகம் வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரவீந்திரனுக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு செப்ரெம்பர் முதலாம் திகதி நடைமுறைக்குவரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டது. ஆனால், அவர் பொதுச்சேவை ஆணைக்குழுவை அணுகி தனது இடமாற்றத்தை பிற்போட்டார். இதுகுறித்து முதலமைச்சருக்கோ அல்லது அவரது அமைச்சருக்கோ கூட அறிவிக்கவில்லை. அதன்பின்னர் உள்ளூராட்சி சபைத் தேர்தலை காரணம் காட்டி மேலும் கால நீடிப்பு பெற்றுக்கொண்டார்.

10 நாட்களுக்கு முன்னர் இந்த இடமாற்றம் குறித்து முதலமைச்சர் பேசிய போது ஆளுநர் என்னை விடுவிக்கவில்லை. ஆதனால் மாற்றலாகிச் செல்லவில்லை என்றும் ரவீந்திரன் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து, உடனடியாகவே ஆளுநரைத் தொடர்புகொண்ட முதலமைச்சர், இது விடயம் குறித்து பேசினார்.

அதன்பின்னர் ஆளுநரிடம் இருந்து மாற்றல் கடிதம் அனுப்பப்பட்ட போதிலும், இதுவரை ரவீந்திரன் முன்னைய கடமையில் தொடர்கிறார்.

அரச நிர்வாக சேவையில் அதிசிறப்பு தரத்திலுள்ள பலர், வடக்கு மாகாண சபையில் இவ்வாறு 20 ஆண்டுகளுக்கு மேலாக கடமையாற்றுகின்றனர். ஆளுநரின் உத்தரவைக்கூட மீறி மாபியா போன்று அவர் செயற்படுவதாகவும் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் விசனம் வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment