பொதுநலவாய விளையாட்டு விழாவில் கலந்துகொள்ளும் வீரர்கள் தங்கியுள்ள விளையாட்டு கிராமத்திலிருந்து ஒருதொகை ஊசிகள் (சிரேஞ்சர்ஸ்) கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த ஊசிகளைப் பயன்படுத்தியவர்கள் யார் என்ற தகவல்கள் தெரியவில்லை. அந்த ஊசிகளை உடனடியாக டி.என்.ஏ. பரிசோதனைக்கு உட்படுத்தி வெகுவிரைவில் அறிக்கை சமர்ப்பிக்கும்படி அவுஸ்திரேலிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
விளையாட்டு கிராமத்தை சுத்தம்செய்யும்போது துப்புரவு தொழிலாளர்களால் கண்டெடுக்கப்பட்ட சில தண்ணீர் போத்தல்களுக்குள் இந்த ஊசிகள் இருந்துள்ளன. இவை உடனடியாக அமைப்பாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
அதனைத் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகள் இந்த ஊசிகள் மூலம் வீரர்களால் ஊக்கமருந்து பயன்படுத்தப்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளனர். இதனால் உடனடியாக அவற்றை பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். இதன் அறிக்கை இரு தினங்களுக்குள் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment