முஸ்லிம்களைக் கொச்சைப்படுத்தி செய்தி வெளியிட்ட தினக்குரலை விற்பனை செய்யப்போவதில்லை - ஓட்டமாவடி முகவா் முஹம்மது அமீர் - News View

About Us

About Us

Breaking

Monday, April 30, 2018

முஸ்லிம்களைக் கொச்சைப்படுத்தி செய்தி வெளியிட்ட தினக்குரலை விற்பனை செய்யப்போவதில்லை - ஓட்டமாவடி முகவா் முஹம்மது அமீர்

திருகோணமலை சண்முகா இந்துக்கல்லூரி முஸ்லிம் ஆசிரியைகளின் அபாயா ஆடைக்கெதிரான கண்டன ஆா்ப்பாட்டத்தை திசை திருப்ப கடந்த 28.04.2018ம் திகதி சனிக்கிழமை “கிழக்கில் தலைதூக்கும் முஸ்லிம் இனவாதம்” என தலைப்பிட்டு முஸ்லிம்களைக் கொச்சைப்படுத்தி செய்தி வெளியிட்ட தினக்குரல் பத்திரிகையை இனி மேல் விற்பனை செய்யப்போவதில்லையென குறித்த பத்திரிகையின் ஓட்டமாவடி முகவா் முஹம்மது அமீர் டெயிலர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கருத்துத்தெரிவிக்கையில், நடுநிலை தவறி முஸ்லிம்கள் மீது சேறு பூசும் விதமாக முஸ்லிம்களுக்கெதிரான செய்திகளை வெளியிடுகின்ற தினக்குரல் பத்திரிகையினை இனி விற்பனை செய்யப்போவதில்லை. இனிமேல் தினக்குரல் பத்திரிகைகளை விற்பனைக்காக எமக்கு அனுப்ப வேண்டாமெனக் கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்தார்

அத்துடன், குறித்த செய்தி தொடர்பில் தினக்குரல் பிரதம ஆசிரியரைத்தொடர்பு கொண்டு வினவிய போது, அது யாழ் தினக்குரல் பத்திரிகையெனவும், அதற்கும் எமக்கும் தொடர்பில்லையெனக் கூறியதாகவும் அமீர் மேலும் தெரிவித்தார்.

எவ்வாறெனினும் இனிமேல் தினக்குரல் பத்திரிகையை எனது கடைக்கு அனுப்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்தார்

அபூ இன்ஷிபா 

No comments:

Post a Comment