முள்ளிவட்டவான் மீனவர்களின் பிரச்சினைக்குத்தீர்வு காணும் முயற்சியில் அமைப்பாளர் கணக்கறிஞர் றியாழ் - News View

About Us

About Us

Breaking

Monday, April 30, 2018

முள்ளிவட்டவான் மீனவர்களின் பிரச்சினைக்குத்தீர்வு காணும் முயற்சியில் அமைப்பாளர் கணக்கறிஞர் றியாழ்

கல்குடாத்தொகுதி, ஓட்டமாவடி பிரதேச சபை மற்றும் கிரான் பிரதேச செயலக நிருவாக எல்லைக்குள் காணப்படும் மிக முக்கியமான குளமான வாகனேரிக்குளத்தில் காலா காலமாக தமது வாழ்வாதரத்தினை நிவர்த்தி செய்யும் பொருட்டு நன்னீர் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வந்த முள்ளிவட்டவான் பிரதேச மக்களின் மீன்பிடித் தொழிலுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு சுமூகமான தீர்வினைப் பெற்றுக்கொடுக்கும் பொருட்டு, கடந்த பாராளுமன்ற வேட்பாளரும், கல்குடாத்தொகுதி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் அமைப்பாளரும், கணக்கறிஞருமான றியாழ் நேற்று 29.04.2018ம் திகதி ஞாயிற்றுக்கிழமை குறித்த பிரதேசத்திற்குச் சென்று சகல மக்களையும் நேரடியாகச் சந்தித்து பிரச்சனைக்கான காரணங்களைத் தெரிந்து கொண்டார்.

மேலும் முள்ளிவட்டவான் பிரதேசத்தில் தமிழ் சகோதரர்களும், முஸ்லிம்களும் சேர்ந்து தமது வாழ்வாரத்திற்காக வாகனேரிக்குளத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்த நிலையில், இரண்டு கிராமங்களுக்குமிடையிலான பிரச்சனையாக குறித்த பிரச்சனையானது தற்பொழுது மாற்றமடைந்துள்ளது.
வாகனேரி பிரதேசத்து மக்கள் மாத்திரமே குறித்த குளத்தில் மீன் பிடிப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என அரசாங்க உத்தியோகத்தர்கள் தெரிவிப்பதாக முள்ளிவட்டவான் மக்கள் தெரிவித்த கருத்துக்களுக்கமைவாக நாங்கள் இந்தப் பிரச்சனையானது, எவருக்கும் பாதிப்பில்லாத வகையில் சுமூகமாக அரசாங்க அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, தீர்த்து வைப்பதற்கு என்னால் முடியுமான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன் எனத் தெரிவித்தார்.

அத்தோடு, மீன்பிடித் தொழில் ஈடுப்பட்ட முள்ளிவட்டவான் மீன்பிடித் தொழிலாளர்கள் சட்டத்திற்கு முரணான வகையில் தொழிலில் ஈடுபட்டதாகக்கருதி உபகரணங்களை பொலிசார் கைப்பற்றி, அவைகள் நீதி மன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதினால் சட்டரீதியாக சகல ஆலோசனைகளையும் பெற்று அதற்கான சட்டரீதியான தீர்வினைப் பெற்றுக்கொள்வதற்கு சகல விதமான சட்ட ஆலோசனைகளையும், அதற்கான முன்னெடுப்புக்களையும் தான் செய்து தருவதாகவும் கணக்கறிஞர் றியாழ் முள்ளிவட்டவான் மீன்பிடித்தொழிலாளர்களிடம் வாக்குறுதியளித்தார்.
அத்தோடு, முள்ளிவட்டவான் பிரதேசத்தில் வறுமைக்கோடிற்கு கீழ் வாழுகின்ற பெண்கள் விடுத்த வாழ்வாதராம் சம்பந்தமான கோரிக்கைகளை செவிமடுத்த கணக்கறிஞர் றியாழ் அதற்கான தீர்வினை தான் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியின் அரசியல் தலைமைகளோடு கலந்தாலோசித்து, முடியுமான தீர்வினை மிக விரைவில் பெற்றுத்தருவதாகவும் மேலும் தெரிவித்தார்.

கணக்கறிஞர் றியாழ் கலந்து கொண்ட குறித்த நன்னீர் மீனவர்களின் பிரச்சனை சம்பந்தமான நிகழ்வின் காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

https://youtu.be/xAR3GEmIMTA
ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

No comments:

Post a Comment