அஹதியா போன்ற முறைசார் கல்வி நடவடிக்கையொன்றே எமது அடுத்த சந்ததியையாவது சிறந்த முன்மாதிரி சமூகமாக மாற்றுமென பூநொச்சிமுனை அஹதியா பாடசாலையின் 27வது வருட நிறைவையொட்டி நடாத்தப்பட்ட சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய போது அஷ்ஷெய்க் ஏ.எல்.ஜுனைத் நளீமி தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், முஸ்லிம்கள் இஸ்லாம் தொடர்பான கல்வியில் பூரணத்துவமடைந்திருப்பதாக அதீத பிரமையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். நாளாந்தம் பாடசாலை உபன்னியாசங்கள், நாளாந்த, வாராந்த பள்ளிவாயல் விஷேட மார்க்கச்சொற்பொழிவுகள், வானொலி முஸ்லீம் நிகழ்ச்சிகள், வெள்ளி மேடைகளான குத்பாக்கள், புஹாரி மஜ்லிஸுகள், நோன்பு கால விஷேட மார்க்கச்சொற்பொழிவுகள், திருமண, ஜனாஸா சொற்பொழிவுகள் என இஸ்லாத்தைச் செவிமடுக்கின்ற சந்தர்ப்பம் பல இருக்கின்ற போது, அஹதியா வகுப்புக்கள் தேவையற்றவொன்று என்ற மனப்பதிவு பெற்றோர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
ஆனால், உண்மையில் இவைகளை மேற்கொள்கின்ற போது, மாணவர் மற்றும் இளைஞர் சமூகத்தில் ஏற்பட்டுள்ள கலாசார பிறழ்வுகள், போதைப்பொருள் பாவனையின் தாக்கம், ஒழுக்க வீழ்ச்சி என்பன வரைப் பார்க்கும் போது, எமது அதீத கற்பனை பிழையானதென எண்ணத்தோன்றுகின்றது.
பிரபல முஸ்லீம் பாடசாலையில் கல்வி கற்று பரீட்சைக்குத்தோற்றிய தமிழ் மாணவி இஸ்லாம் பாடத்தை விருப்புத்தேர்வாக எழுதி சித்தியெய்திய நிலையில், சக முஸ்லீம் மாணவி வெறுமனே 24 புள்ளிகள் பெற்று தோல்வியடைந்துள்ளமை எமது மார்க்கக்கல்வி தொடர்பான மீளாய்வினை வேண்டி நிற்கின்றது.
எனவே, அஹதியா போன்ற முறைசார் கல்வி நடவடிக்கையொன்றே எமது அடுத்த சந்ததியையாவது சிறந்த முன்மாதிரி சமூகமாக மாற்றுமென பூநொச்சிமுனை அஹதியா பாடசாலையின் 27வது வருட நிறைவையொட்டி நடாத்தப்பட்ட சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய போது அஷ்ஷெய்க் ஜுனைத் நளீமி தெரிவித்தார்.
அஹதியா பாடசாலையின் அதிபர் ரசூல் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மாவட்ட அஹதியா சம்மேளன செயலாளர் அஷ்ஷெய்க் பாயிஸ் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் அஹதியா பாடசாலையின் நிறுவனர் செய்யித் அஹமத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment