குன்றும் குழியுமாகக் காணப்பட்ட பாலை நகர் வீதி கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜி.அஸீஸுல் றஹீம் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் கெளரவத்தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி மற்றும் செயலாளர் எச்.எம்.எம்.ஹமீம் ஆகியோரின் முயற்சியினால் செப்பணிப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதியமைச்சர் மர்ஹூம் முஹைதீன் அப்துல் காதரின் காலப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட குறித்த வீதி நீண்ட காலமாக திருத்தப்படாமல் சேதமடைந்து குன்றும் குழியுமாக பொது மக்கள் பிரயாணம் செய்ய முடியாமல் காணப்பட்டது.
இதனைக் கருத்திற்கொண்டு குறித்த வீதியை உடனடியாக செப்பணிட்டுத் தருமாறு இப்பிரதேச மக்கள் விடுத்த வேண்டுகோளின் பேரில், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜி.அஸீஸுல் றஹீம் அவர்களின் வேண்டுகோளில் கெளரவ தவிசாளர், செயலாளரின் முயற்சியினால் உடனடியாக செப்பணிப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வீதியை செப்பணிட முயற்சி மேற்கொண்ட பிரதேச சபை உறுப்பினர், கெளரவத்தவிசாளர், செயலாளர் ஆகியோருக்கு இப்பிரதேச மக்கள் தமது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவிக்கின்றனர்.
றிஸ்வான் இப்றாஹீம்
No comments:
Post a Comment