போர்ட்சிட்டியில் இருந்து இலங்கை பாராளுமன்றத்தில் கால் பதிக்கும் சீனர்கள் சொல்லும் செய்தி என்ன? - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 4, 2018

போர்ட்சிட்டியில் இருந்து இலங்கை பாராளுமன்றத்தில் கால் பதிக்கும் சீனர்கள் சொல்லும் செய்தி என்ன?

இலங்கையில் மகிந்த ஆட்சி காலத்தில் சீனாவுடன் செய்து கொள்ளப்பட்ட பல வியாபார உடன்படிக்கையை தொடர்ந்து பல சீன நாட்டினர் இலங்கைக்கு படையெடுக்க தொடங்கினர். முக்கியமாக போர்ட்சிட்டி கட்டுமான பணிகள் மற்றும் இதர கட்டிட மற்றும் பெரும் தெருக்கள் நிர்மாண பணிகள் சீனர்கள் வசம் உள்ள நிலையில் , இலங்கையின் பல துறைகளில் சீனர்கள் பெருமளவு உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் குடியிருப்புகள் கொழும்பின் கொள்ளுப்பிட்டி , பம்பலப்பிட்டி போன்ற இடங்களையும் தாண்டி தற்போது வெள்ளவத்தை , தெஹிவள , கல்கிச பகுதிகளிலும் நிலைபெற தொடங்கியுள்ளது. இது மட்டுமன்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இவர்கள் வசித்து வருகின்றனர்.

அது மட்டுமன்றி , இலங்கையின் பல இடங்களில் சிங்கள பெரும்பான்மை மொழிக்கு கொடுக்கப்படாத முக்கியத்துவம் கூட சீன மொழிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. சாதாரண பாவனை மொழிக்கு தரப்படும் முக்கியத்துவம் பல இடங்களில் சீன மொழிக்கும் சமமாக கொடுக்கப்படுகிறது.

இலங்கையின் வரலாற்றை பொறுத்தவரை வியாபார நடவடிக்கைகள் மூலம் காலூன்றிய தரப்புகள் இறுதியில் இலங்கையின் ஆட்சி பீடம் வரை செல்வாக்கு செலுத்திய சம்பவங்கள் நிறையவே உள்ளது. அதை ஒத்த நிலைமை, சீனர்களிடமும் இலங்கையின் அரசியல் பக்கம் அக்கறை ஏற்பட்டுள்ளது.
இன்று இலங்கை பாராளுமன்றம் பெரியதொரு மாற்றத்துக்கு வழிகோல போகும் நம்பிக்கையில்லா பிரேரணை மீது கவனத்தை செலுத்தியவேளை , சீனாவின் இளைஞர் யுவதிகள் பலர் இலங்கை பாராளுமன்றுக்கு வருகை தந்து தமது பார்வையை செலுத்தியுள்ளனர்.

இந்த நிகழ்வை வெறும் பாராளுமன்ற வருகையாக கருதமுடியாது. காரணம் சீனர்கள் எதையும் மிகவும் திட்டமிட்டு எதிர்கால நோக்கத்துடன் செய்பவர்கள். அதுமட்டுமன்றி, சீன அரசின் நெறிப்படுத்தல் இன்றி எந்தவொரு சீன பிரஜையும் அரசியல் விவகாரங்களில் ஆர்வம் காட்டுவது இல்லை என்று கூறுவதிலும் பார்க்க தனி பிரஜைகளால் அவ்வாறு அரசியல் விவகாரங்களில் தலையிட சீன அரசு இடம் கொடுப்பதில்லை.

இந்த விடயங்களை வைத்து நோக்கும் போது , இலங்கை அரசியல் பக்கம் சீனாவின் பார்வை காலூன்ற தொடங்கியுள்ளது என்றே கூறவேண்டும். இந்த நிலையை சீனா காலுன்றிய நாடுகளின் வரலாறுகளுடன் ஒப்பிட்டு பார்த்தால் புரிந்து கொள்ளமுடியும். ஒரு வேளை அவ்வாறு ஒரு நிலை ஏற்படும் பட்சத்தில் இலங்கை அரசியல் சீனாவின் கைகளில் கொண்டுவரப்பட என்ன விலை கொடுக்கவும் சீனா தயங்காது என்பது மட்டும் உண்மை.

No comments:

Post a Comment