வென்றார் ரணில், தோற்றது கூட்டமைப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 4, 2018

வென்றார் ரணில், தோற்றது கூட்டமைப்பு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிரணியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் சற்றுமுன்னர் நிறைவுக்கு வந்தது.

இந்நிலையில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 76 பேரும் எதிராக 122 பேரும் வாக்களித்துள்ள நிலையில், நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் 26 பேர் கலந்துகொள்ளவில்லை. பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மேலதிக 46 வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.

இதேவேளை, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த 76 பேரில் 13 பேர் ஸ்ரீலங்க சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்ல பிரேரணை மீதான வாக்கெடுப்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கலந்துகொண்டு வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment