காத்தான்குடி நகர சபையின் முதலாவது அமர்வில் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினரான முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் கலந்து கொள்ளவில்லை. காத்தான்குடி நகர சபையின் முதலாவது அமர்வு இன்று(5.4.2018) வியாழக்கிழமை காத்தான்குடி நகர சபையின் சபா மண்படத்தில் நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது 18 உறுப்பினர்களைக் கொண்ட காத்தான்குடி நகர சபையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் 10 உறுப்பினர்களும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சார்பில் 4 உறுப்பினர்களும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஒரு உறுப்பினரும் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் ஒரு உறுப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதில் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினரான முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் கலந்து கொள்ளவில்லை.
காத்தான்குடி நகர சபை தேர்தலில் விகாதாசாரப்படி முஸ்லிம் தேசியக் கூட்டமைப்புக்கு 3 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். அதில் பெண்ணொருவரின் பெயர் உறுப்பினர் பட்டியலில் வழங்காததால் இருவரின் பெயர்கள் மாத்திரமே வர்த்தமாணியில் பிரசுரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எம்.எஸ்.எம்.நூர்தீன்
No comments:
Post a Comment