ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்டு வந்த 26 அன்னதான சாலைகள் தடை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொதுமக்கள் சுகாதார பரிசோதர்களின் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய தெரிவித்தார்.
நேற்று முன்தினம் காலை முதல் நேற்று காலை ஆறு மணி வரையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது இவை தடை செய்யப்பட்டன.
வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரண்டாயிரத்து 530 அன்னதான சாலைகள் இலங்கை பொதுமக்கள் சுகாதார பரிசோதகர்களினால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment