ஷண்முகா ஹபாயா சர்ச்சை சம்பந்தமாக கள ஆய்வுக்காக குரல்கள் திருகோணமலை விஜயம் - News View

About Us

About Us

Breaking

Monday, April 30, 2018

ஷண்முகா ஹபாயா சர்ச்சை சம்பந்தமாக கள ஆய்வுக்காக குரல்கள் திருகோணமலை விஜயம்

திருகோணமலை ஷண்முகா இந்துக் கல்லூரியில் சென்ற வாரம் 5 முஸ்லீம் ஆசிரியைகள் தங்களின் கலாச்சார ஆடைகளை அணிந்து பாடசாலை செல்வதற்கு அதிபராலும் பாடசாலை நிர்வாகத்தினராலும் தடைவிதிக்கப்பட்டதையும் அதனைத் தொடர்ந்து கல்லூரிக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதும் அனைவரும் அறிந்ததே.

அதனைத் தொடர்ந்து வெளிப்படையாக தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்ட ஆசிரியைகளைச் சந்திப்பதற்காகவும், துல்லியமான தகவல்களைத் திரட்டுவதற்காகவும் குரல்கள் இயக்கம் நேற்றுமுன்தினம் திருகோணமலைக்கு விஜயம் செய்தது.

குரல்கள் இயக்கத்தின் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சகோதரர் சப்ரி, சட்டத்தரணிகளான முஹைமின் காலித், ருஷ்தி ஹஸன், கமால் ஆகியோர் குரல்கள் இயக்கம் சார்பாக திருகோணமலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

பாதிக்கப்பட்ட ஆசிரியைகள் அவர்களின் கணவர் மார்களைச் சந்தித்து நடந்தேறிய சபவங்களின் முழுத்தகவல்களையும் பெற்றுக் கொண்டதோடு அடுத்த கட்ட நகர்வுகளுக்கான ஆலோசனைகளையும் குரல்கள் இயக்கம் வழங்கியது.

ஷண்முகா இந்துக் கல்லூரிக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தல், சம்பவம் தொடர்பான முறைப்டாடொன்றை மனித உரிமை ஆணையகத்திற்கு சமர்ப்பித்தல், குறிப்பிட்ட ஆசிரியைகளின் கணவர்கள் பாடசாலை அதிபரை மிரட்டியதாக பரப்பட்ட பொய்ப் பிரச்சாரத்திற்கு எதிராக செய்தித்தளங்களுக்கு எதிராக மான நஷ்ட வழக்குத் தாக்கல் செய்தல், இனவாதத்தை தூண்டும் வகையில் முக நூல்களிலும் குறிப்பிட்ட ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்தல் போன்ற பல விடயங்கள் கலந்துரையாடபபட்டன.

ஆசிரியைக அவர்களது கணவன்மாரும் ஒத்துழைப்புத்தருவதாகவும் உறுதியளித்தனர்.

No comments:

Post a Comment