மாடியில் இருந்து வீழ்ந்து நபரொருவர் பலி - பொலநறுவையில் சம்பவம் - News View

About Us

About Us

Breaking

Friday, March 30, 2018

மாடியில் இருந்து வீழ்ந்து நபரொருவர் பலி - பொலநறுவையில் சம்பவம்

பொலநறுவை நகரில் நிர்மாணிக்கப்பட்டுவரும் கட்டடத்தின் நான்காம் மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்றைய தினம் மாடியில் இருந்து தவறிவிழுந்து, படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் பொலநறுவை கல்பொத்த பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய டபிள்யு.எம். தயானந்த என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment