இந்தியாவை விட்டு சீனாவை நாட வேண்டியேற்பட்டது ஏன் - மஹிந்த ராஜ­பக்ஷ - News View

About Us

Add+Banner

Friday, March 2, 2018

demo-image

இந்தியாவை விட்டு சீனாவை நாட வேண்டியேற்பட்டது ஏன் - மஹிந்த ராஜ­பக்ஷ

china+visit+300
இலங்­கையில் துறை­முகம் மற்றும் நெடுஞ்­சா­லை­களை அமைப்பதற்கு இந்­தியா ஆர்வம் காட்­ட­வில்லை. அத­னா­லேயே குறித்த வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுப்­ப­தற்கு சீனாவை நாட வேண்டியேற்­பட்­ட­தாக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தெரி­வித்­துள்ளார். 

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ இந்­தி­யா­விற்­கான விஜயத்தை முடித்­துக்­கொண்டு நாடு திரும்பும் வழியில் பெங்களூருவில் வைத்தே ஊட­க­வி­ய­லா­ள­ர்களிடம் இதனைத் தெரிவித்­துள்ளார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

இலங்­கையில் துறை­முகம் மற்றும் நெடுஞ்­சா­லை­களை அமைக்கும் வேலைத்­திட்­டத்தை முன்­னெ­டுக்­கு­மாறு இந்­தி­யா­விடம் வேண்டிக்கொண்டோம். எனினும் இந்­திய அர­சாங்கம் அதனை ஏற்றுக்­கொள்­ள­வில்லை. எவ்­வா­றி­ருந்­த­போதும் அம்பாந்தோட்டையில் துறை­முகம் அமைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்­தியா இருந்­தது.

எனினும் நாம் குறித்த வேண்­டு­கோளை யுத்த காலத்­தி­லேயே முன்வைத்­தி­ருந்தோம். அதனால் இந்­திய அர­சாங்கம் அதனை நிராக­ரித்­தி­ருக்­கலாம் என நினைக்­கிறேன். ஆகவே குறித்த செயற்றிட்­டத்தை நாம் சீனா­விடம் முன்­வைத்தோம். அந்த யோசனை தொடர்பில் சீனா உட­னடி நட­வ­டிக்­கைக்குத் தயா­ரா­னது.

அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தின் முக்­கி­யத்­துவம் பற்றி எமக்கு நன்கு தெரியும். அத­னா­லேயே அத்­து­றை­முகப் பணி­களை முன்னெடுப்­ப­தற்குத் தயா­ரானோம். நாட்டை பிர­தா­ன­மாகக் கொண்டு நட­வ­டிக்கை எடுப்­பதே சிறந்த தலை­வரின் தலை­யாய கட­மை­யாகும். 

எனினும் இலங்­கையின் தற்­போ­தைய அர­சாங்கம் தேசிய சொத்துக்களை விற்­பனை செய்­கி­றது. தனியார் மய­மாக்­க­லுக்கு எதி­ரா­ன­தா­கவே எமது கொள்கை இருந்­தது. தனியார் மய­மாக்கல் மூலம் நாட்டை கட்­யெ­ழுப்ப முடியும் என நாம் எதிர்­பார்க்­க­வில்லை. இலங்கை, இந்­தி­யா­வுடன் சிறந்த உற வைப் பேணி வந்­தது. எனினும் கடந்த காலங்­களில் எமக்கும் இந்­தி­யா­விற்­கு­மி­டையில் தவ­றான புரி­தல்கள் ஏற்­பட்­டி­ருந்­தன. 

மேலும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் நாம் பெரு­வெற்றி பெற்றுள்ளோம். அதன் மூலம் மக்கள் எமக்கு ஆணை வழங்கியுள்ளனர். அத்­துடன் குறித்த தேர்­தலை நாம் உள்ளூர் அதிகார சபை­களின் ஆட்­சியைத் தீர்­மா­னிக்கும் தேர்­த­லாகக் கருதவில்லை. தேசிய அர­சாங்­கத்­திற்கு எதிரான ஆணையாகவே கருதுகிறோம். நல்லாட்சி அரசாங்கத்தின் கடந்த மூன்றாண்டு கால வேலைத்திட்டங்களுக்கு மக்கள் உள்ளூ ராட்சி மன்றத் தேர்தலூடாக எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *