ஸ்மித்துக்கு அளித்த தண்டனை கடுமையானது - தென்ஆப்பிரிக்க அணியின் தலைவர் பிளிஸ்சிஸ் - News View

About Us

About Us

Breaking

Friday, March 30, 2018

ஸ்மித்துக்கு அளித்த தண்டனை கடுமையானது - தென்ஆப்பிரிக்க அணியின் தலைவர் பிளிஸ்சிஸ்

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித்துக்கு வழங்கப்பட்ட தண்டனை கடுமையானது என்று தென்ஆப்பிரிக்க அணியின் தலைவர் பாப் டு பிளிஸ்சிஸ் கருத்து தெரிவித்துள்ளார். தென்ஆபிரிக்காவுக்கு எதிராக 3-வது டெஸ்டில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் அவுஸ்திரேலிய தலைவர் ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வோர்னர், பான்கிராப்ட் ஆகியோர் சிக்கினர்.

தவறை ஒப்புக்கொண்ட ஸ்டீவன் சுமித், டேவிட் வோர்னர் ஆகியோருக்கு சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் விளையாட ஒரு ஆண்டு தடையை அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை விதித்தது. பான்கிராப்டுக்கு 9 மாதம் விளையாட தடை விதிக்கப்பட்டது.

மேலும் ஸ்டீவன் ஸ்மித் தடை முடிந்து ஒரு ஆண்டுக்கு அவர் கேப்டன் பதவிக்கு பரிசீலிக்கப்படமாட்டார் என்றும் அறிவித்தது. இதற்கிடையே தென் ஆபிரிக்கா- அவுஸ்திரேலியா மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று ஜோகன்ஸ்பர்க் நகரில் தொடங்கியது.

இந்த நிலையில் ஸ்டீவன் ஸ்மித் விவகாரம் குறித்து தென்ஆபரிக்க தலைவர் பாப் டு பிளிஸ்சிஸ் கூறியதாவது ஸ்டீவன் ஸ்மித்துக்காக மிகவும் வருத்தப்படுகிறேன். அவருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் மெசேஜ் அனுப்பினேன். எனது உள்ளத்தில் இருந்து தகவலை அனுப்பினேன். அவரை இதுபோன்ற சூழ்நிலையில் பார்க்க விரும்பவில்லை. அடுத்து வரும் நாட்கள் அவருக்கு கடினமாக இருக்கும்.

ஸ்மித் இப்பிரச்சினையில் இருந்து வெளியே வர வேண்டும். வலிமையானவராக இருக்க வேண்டும். வோர்னர், பான்கிராப்ட் ஆகியோருக்கு விளையாட தடை விதிக்கப்பட்டது மிகப்பெரிய தண்டனையாகும். இது அதிகபடியானது என கருதுகிறேன். ஸ்டீவன் ஸ்மித் நல்ல மனிதர். ஆனால் அவர் தவறான இடத்தில் நின்று விட்டார்.

No comments:

Post a Comment